தேனி, மே 20- தேனியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதை யடுத்து பாதிப்பு எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி சின்ன மனூர் அருகே முத்துலாபுரத்தில் ஏற்க னவே தொற்று உள்ளவர்களுடன் ஏற்பட்ட தொடர்பில் இருந்த 2 ஆண்கள், ஒரு பெண் ணிற்கும்,மும்பை தாராவியிலிருந்து வந்த ஆண்டிபட்டி கொழிஞ்சிபட்டியை சேர்ந்த கணவன், மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத னைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. புதனனறு மட்டும் 7 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர் என்பது குறிப்பி டத்தக்கது. தேனி அரசு மருத் துவ கல்லூரி மருத்துவமனையில் 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.