tamilnadu

img

நாடு முழுவதும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம் செய்க பீடித் தொழிலாளர் மாநில மாநாடு கோரிக்கை

தென்காசி, ஆக.30-

     தமிழ்நாடு பீடித் தொழிலாளர் சம் மேளன மாநில மாநாடு தென்காசியில் ஞாயிறு, திங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அன்று பேரணி பொதுக்கூட்டம் நடை பெற்றது.   திங்கட்கிழமை அன்று சம்மேள னத்தின் பிரதிநிதிகள் மாநாடு குற்றா லத்தில் நடைபெற்றது.  

      சம்மேள னத்தின் மாநில தலைவர் எம். பி.   ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சம்மேளன கொடியை மாநிலத் துணைத் தலைவர் டி. ஆர்.  பலராமன் ஏற்றினார்.  வி. நாகேந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வசித்தார்.  வரவேற்பு குழுவின் தலைவர் பேராசிரியர் ஆர்.  சங்கரி வரவேற்றார்.  சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.  மகாலட்சுமி மாநாட்டை துவக்கி வைத்தார்.  மாநா ட்டில் சம்மேளனத்தின் பொதுச்செய லாளர் திருச்செல்வன் செயலர் அறிக் கையையும் மாநில பொருளாளர்  பாப்பு வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர்.  மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.  சவுந்தரராசன் பேசினார்.

      மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாநில நிர்வாகி எஸ்.  கண்ணன் பேசினார்.   மாநிலத் தலைவராக எம்.பி.  ராமச்சந்திரன், பொதுச்செயலாளராக கே. திருச்செல்வன், பொருளாளராக பி.சித்தாரா பேகம், துணைத் தலை வர்களாக பாப்பு சரவணன், தர்மகனி, சண்முகம், துணை பொதுச் செயலா ளர்களா க.நாகேந்திரன், மகா விஷ்ணு, துணை செயலாளர்களாக செந்தில்குமார், குருசாமி, முருகன்,  மாரிச்செல்வம் உட்பட 13 நிர்வாகி கள், 16 சம்மேளனக் குழு உறுப்பினர் கள் தேர்வு செய்யப்பட்டனர்.

      மாநாட்டில், மோடி அரசின் சட்டங் களால் பீடித் தொழில் பாதிப்பு அடைந் துள்ளது. பீடித் தொழிலுக்கான 28சதவீத ஜிஎஸ்டி வரியை குறைக்கக் கோரியும் சேம நலத்திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க கோரியும் மத்திய மோடி அரசு நாடு முழுவதும் பீடித் தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான குறைந்தபட்ச கூலி அறிவிக்க வலியுறுத்தியும்  பீடித் தொழி லாளர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவுடன் வீடுகட்ட மானியத்தை  உயர்த்த வலியுறுத்தியும் சுருட்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்ய குழு அமை க்க கோரியும்  வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை   வெளியேற்ற நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    

    தென்காசி மாவட்ட பீடித்தொழி லாளர் சங்க மாவட்ட நிர்வாகி மகா விஷ்ணு நன்றியுரை கூறினார்.  மாநா ட்டில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் அயூப்கான்,  மணிகண்டன், தர்மராஜ் மற்றும் பீடி சங்க மாவட்ட நிர்வாகி கள் ஆரிய முல்லை தர்மக்கனி, குரு சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.