tamilnadu

பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

தூத்துக்குடி, பிப்.27- தூத்துக்குடி மாவட்டம், விளாத்தி குளம் ராஜூவ் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்மகன் கருப்பசாமி (34). இவர் புதனன்று தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கரிசல்குளம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் அவரது பைக் மீது மோதியதில் பலத்த காயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.