தூத்துக்குடி:
வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இழிவாக பேசிய கேரளா காங்கிரஸ் கட்சி தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்ககோரி ஜனநாயக மாதர் சங்கத்தின்தூத்துக்குடி புறநகர் பொன்னாண்டி நகர் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் குஞ்சாரம்மாள் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் பூமயில், புறநகர் செயலாளர் சரஸ்வதி, நிர்வாகி பார்வதி சிஐடியு பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.