tamilnadu

தீ வைக்கப்பட்ட பெண் சாவு: கணவர் மீது கொலை வழக்குப்பதிவு

தூத்துக்குடி, மே 28- விளாத்திகுளம் அருகே கணவ ரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கணவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், விளா த்திகுளம் அருகே வேம்பார் ரோஜா பாளையத்தைச் சேர்ந்தவர் மாட சாமி (57). கூலி தொழிலாளி. மனை வியை பிரிந்து வாழ்ந்த இவர் லட்சுமி (45) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். லட்சுமியும் ஏற்கனவே முதல் கணவரை பிரிந்து வாழ்ந்த வர். லட்சுமி, கட்டிட தொழிலாளி யாக வேலை செய்தார். இந்நிலை யில் மாடசாமி அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார்.

கடந்த 23-ம் தேதி இரவில் கண வன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மாடசாமி லட்சுமியின் மீது மண் ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த லட் சுமி அலறியடித்து வெளியே ஓடி வந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக் காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். ஆனா லும் சிகிச்சை பலனின்றி லட்சுமி புதன்கிழமை காலையில் பரிதாப மாக உயிரிழந்தார். இதையடுத்து சூரங்குடி போலீசார் மாடசாமி மீதான கொலைமுயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை கைது செய்தனர்.