தூத்துக்குடி, ஆக.13- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றி யம் தெற்கு வண்டானம் ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் துவக்க நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்ப ரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெற்கு வண்டானம் ஊராட்சியில் கலிங்கப்பட்டி (எ) குமரபுரம் மற்றும் தெற்கு வண்டானம் பகுதி யில் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்து மாற்றுத்திறனாளியிடம் கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தி மற்றும் விளம்ப ரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியா ளர்களிடம் கூறுகையில், கடந்த வாரம் தெற்கு வண்டானம், குமராபுரம், கலிங்கப்பட்டி பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை இருப்பதாகவும் சீவலப்பேரி குடிநீர் திட்டத்தின் மூலம் எங்களுக்கும் பாதுகா க்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று கோ ரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை வியாழனன்று தெற்கு வண்டானம், குமரா புரம் கிராமங்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தின் கீழ் குடிநீர் வசதி செய்ய ப்பட்டுள்ளது. ஏற்கனவே தூத்துக்குடியில் ரூ.106 கோடி மதிப்பீட்டில் 240 குடியிருப்புகளுக்கு குடி நீர் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டம் முழுமை யாக நிறைவேற்றப்பட்டவுடன் கயத்தாறு, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்தி குளம், புதூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 240 குடியிருப்பு பகுதிகளுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். கோவில்ப ட்டிக்கு 2வது பைப்லைன் திட்டம், 4வது பைப்லைன் திட்டம் ஆகிய திட்டங்கள் மூல மாக குடிநீர் தேவையான அளவு கிடைக்கி றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரா மங்களுக்கும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் கிடைக்க உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.