ஸ்பிக் ஆலையில் 2 தொழிலாளர் பலி சிஐடியு போராட்டம்: இழப்பீடு வழங்க சம்மதம்
தூத்துக்குடி, ஆக.12-தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக முத்தையாபுரம் பாரதி நகரைச் சேர்ந்த அந்தோணி(55) என்ப வரும், பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் பிச்சாண்டி (23) என்பவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அங்கே தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருந்த 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்த் தேக்க தொட்டியில் பிச் சாண்டி மற்றும் அந்தோணி தவறி விழுந்து உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பிற்கு காரணமான சேப்டி மேனேஜர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய கோரியும், பணி யின்போது மரணமடைந்த தொழிலாளிகளின் குடும்பங்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் சிஐடியு தலை வர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஸ்பிக் ஆலை முன்பு நள்ளிரவு 12 மணி வரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்ட களத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பிரகாஷ், போராட்ட குழுவினரு டன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படாததால் இத னைத் தொடர்ந்து சனிக்கிழமை காலையும் முத்தையா புரம் காவல் நிலையத்தில் உதவி கண்காணிப்பாளர், ஸ்பிக் மேனேஜர், ஹெச்.ஆர்., சிஐடியு, சிபிஎம் உள்ளிட்ட அமைப்பு களுடனும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுட னும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில், பணியின் போது உயிரிழந்த அந்தோணி, பிச்சாண்டி குடும் பங்களுக்கு தலா ரூ. 6 லட்சத்து 25 ஆயி ரம் நிவாரணம் கொடுப்பதாக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. பேச்சுவார்த்தையில் சிஐடியு மாவட்டத் தலைவர் இரா. பேச்சிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர்ச் செயலாளர் ராஜா, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாரியப்பன், புறநகர் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடியை விமர்சித்த மக்கள் அதிகாரம் நிர்வாகி கைது
தேனி , ஆக. 12-போடியில், தேசிய கொடி மற்றும் பிரதமர் மோடி குறித்து அவதூறாக விமர்சித்து படங்கள் வெளியிட்டதாக மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கப்பட்டது. இது தொடர்பாக சமூக வலை தளங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காஷ்மீரில் காவிக்கொடி பறப்பது போன்றும், தேசிய கொடி கழிப்பறையில் பயன்படுத்துவது போன்றும் பிரதமர் மோடி புகைப்படத்துடன் தனி நபர் ஒருவரின் முகநூலில் புகைப்படம் வெளியானது. இதுகுறித்து போடி நகர பா.ஜ.க. நகர செயலாளர் தண்டபாணி (40) போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் போடி நகர மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியான போடி குலாலர்பாளையத்தை சேர்ந்த ஜோதிபாசு (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.