tamilnadu

சட்டம், ஒழுங்கை காக்க முக்கியத்துவம் புதிய டிஎஸ்பி கலைகதிரவன் உறுதி

தூத்துக்குடி, ஜூன் 11- கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக கலைகதிரவன் புதனன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கோவில்பட்டி காவல் துணைக் கண் காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெப ராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதையடுத்து தூத்துக்குடி புறநகர் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணி யாற்றி வந்த கலைகதிரவன் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதை யடுத்து அவர் புதனன்று கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில்பட்டியில் ஏற் படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்- ஒழுங்கை பேணி காக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். கோவில்பட்டி காவல் சர கத்திற்கு உள்பட்ட மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளித்து சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும். பொதுமக்கள் எந்தப் பிரச்னை என்றாலும் என்னை தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை நேரில் சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என்றார்.

;