tamilnadu

இளம்பெண் மரணம்: 3 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி, ஆக.6- சாத்தான்குளம் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் மர்ம மான முறையில் இறந்த சம்பவம் தொடர்பாக கணவர், உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தபுரம் கிழக்குத் தெரு வைச் சேர்ந்தவர் தங்கதுரை (29). இவரது மனைவி வெண்ணிலா (21). இந்த தம்பதி யருக்கு கடந்த 10.02.2019-ல் திருமணம் நடந்துள்ளது. 4 மாத ஆண் குழந்தை உள்ளது. தற்போது வெண்ணிலா 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதனன்று அவர் தனது வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறை யில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான் குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக டிஎஸ்பி (பொறுப்பு) நாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். வெண்ணிலாவின் சந்தேக மரணம் தொடர்பாக அவரது கணவர் தங்கதுரை, மாமனார் முருகன், மாமியார் சமுத்திரம் ஆகிய 3பேர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளில் பெண் உயிரிழந்துள்ளதால், இதுகுறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.