tamilnadu

ஆசிரியை  பாலியல் பலாத்காரம்

தூத்துக்குடி, ஜூன் 2- திருச்செந்தூர் அருகே திருமண ஆசைகாட்டி பள்ளி ஆசிரியையை பாலி யல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீ சார் கைது செய்தனர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகு தியைச் சேர்ந்தவர் முத்து மகள் பிரியா (25). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.) பிரியா அடைக்கலபுரத்தில் உள்ள பள்ளி யில் ஆசிரியையாக பணிபுரிந்து வரு கிறார். ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் திலக் வேலன் (26). இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். பிரியாவை திருமணம் செய்து கொள் வதாக ஆசை வார்த்தை கூறி திலக் வேலன் அவருடன் அடிக்கடி உல்லாச மாக இருந்துள்ளார். பின்னர் அவரை திரு மணம் செய்து கொள்ள மறுத்து விட்டா ராம். இதுகுறித்து பிரியா திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ் பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து சிவராஜை கைது செய்து விசாரித்து வரு கிறார்.

;