தூத்துக்குடி, செப். 8- தூத்துக்குடி சிவந்தா குளம் மாநகராட்சிப் பள்ளி யில் ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் சார்பில்ஆசிரியர் தின விழா நடைபெற்றது. தூத்துக்குடி சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் சார்பில் ஆசிரியர் தினவிழா நகர்புற வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. ஸ்பிக் நகர் இன்னர்வீல் கிளப் தலைவி தனராதா, செயலாளர் புனித வதி, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்று ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கினர். விழாவில் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ந்த னர். பள்ளி தலைமை ஆசிரியை எமல்டா, உதவி தலைமை ஆசிரியையைகள் ஜெபா எபனேசர், ஜாண்சிராணி, சாந்தி, கலியலட்சுமி, தேவ செல்வி, கிறிஸ்டி ஜெனட், எஸ்தர், சாந்தாகுமாரி, ரேவதி, முத்துகற்பகம், ஜெயந்தி, கெத்சி, முருகேச கனி, சிறப்பாசிரியர்கள் ராஜா சண்முகம், ஜூடி சிவானிற்றா, ஆப்பிள் ஜெயா, விண்ணரசி, பாரதி, இருதய ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.