தூத்துக்குடி, ஆக.11- தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் தூத்துக்குடி மாவட்ட 12-வது மாவட்ட மாநாடு தோழர் பெ.ராக வன் நினைவரங்கத்தில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் கலையர சன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை, பரமசிவன் அஞ்சலி தீர்மானங்களை வாசித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் வர வேற்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் தங்கராஜ் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செய லாளர் வெங்கடேசன் வேலை அறி க்கை தாக்கல் செய்தார். டிஎன்பி டிஎப் மாவட்டத் தலைவர் பவுல் ஆபி ரகாம், சிவஞானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் பாக் கியசீலி, மாவட்ட இணைச் செயலா ளர் மூர்த்தி, ஞானராஜ், சின்னதம்பி ஆகியோர் தீர்மானங்களை முன் மொழிந்தனர். மாநில செயலாளர் சி.ஆர்.இராஜகுமார் நிறைவுரை யாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் மகேந்திர பாபு நன்றி கூறி னார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவரும், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் தலைமையில் கலையரசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் டிஎன்ஆர்ஜிஏ பொதுச் செயலாளரும் டிஎன்ஜிஇஏ மாநில துணைத் தலைவர் சு.பார்த்தீபன், மாநிலச் செயலாளர் சி.ஆர்.இராஜ குமார், டிஎன்ஆர்ஜிஏ மாநில துணைத் தலைவர் ஏ.வி.மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டிஎன்ஆர்ஜிஏ மாவட்டச் செய லாளர் செந்தூர்ராஜன், மாவட்ட துணைத் தலைவர் ஞானராஜ், டிஎன்ஜிபிஏ மாவட்டச் செயலாளர் இராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.