திருச்சிராப்பள்ளி, நவ.11- திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை துப்புரவு தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறு அன்று மாலை வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலை வர் இளையராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மாறன், மாவட்ட பொதுச்செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கூட்டத்தில், திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு தொழி லாளர்களுக்கு 1.4.19 முதல் தினக்கூலி ரூ 500 வழங்க வேண்டும். அரியர் பணத்தை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இபிஎப் பணத்தை உடனடியாக தொழிலாளர் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்ய மனிதர்க ளை இறக்குவதை தவிர்த்து நவீன ரோபோ இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை நிர்வாகிகள் நாகராஜ், பாக்கியராஜ், வளர்மதி, பிரியா, விமலா உள்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்டப் பொறுப்பாளர் ராஜூ வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.