tamilnadu

img

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம் தூத்துக்குடி மையத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி, மே 27- தூத்துக்குடியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புதனன்று தொடங்கியது. இதை யொட்டி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதற்கான ஏற்பா டுகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர் தெரிவிக்கையில், தூத்துக்குடி  மாவட்டத்தில் மேல்நிலை இரண்டா மாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2020 விடைத் தாள் திருத்தும் பணி மே 27 முதல் ஜூன்  9 வரை நடைபெறவுள்ளது. தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் காரப்பேட்டை நாடார்  ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோ வில்பட்டி கல்வி மாவட்டத்தில் சி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை விடைத்தாள் திருத்தும் மையமாக தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

மேலும், காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணினி  அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களும் சி.கே.டி.  மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து பாடங்களும் மதிப்பீடு செய்யப் படவுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி யில் சமூக இடைவெளியை பின்பற்றி  ஏ.பி.சி.வீரபாகு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருத்தப்படும் பாடங்கள் - கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் வணிகக்கணிதம். சக்தி விநாயகர் இந்து வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம், சுப்பையா வித்யாலயம் மேல்நி லைப்பள்ளியில் பொருளியல் மற்றும் வரலாறு, காஞ்சி ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அனைத்துப் பாடங்கள் என மொத்தம் 4 துணை விடைத் தாள் திருத்தும் மையங்கள் செயல்பட உள்ளன. மேலும் முதன்மை மற்றும் துணை  விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.

விடைத் தாள்கள் திருத்தும் பணியில் 1,344 முது கலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ள னர். அனைத்து விடைத்தாள் திருத்தும் மை யங்களும் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, தினந்தோ றும் கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தினந்தோறும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்கள் அனைவரும் சோப்பு மூலம்  கைகளை கழுவுவதற்கும், ஒரு ஆசிரி யருக்கு 3 முகக்கவசம் என அனைவ ருக்கும் வழங்கிட போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் சாணிடை சர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி விடைத்தாள் திருத்த ஏதுவாக போதிய இடவசதி (ஒரு அறையில் ஒரு முதன்மைத் தேர்வாளர் - ஒரு கூர்ந்தாய்வு அலுவலர், 6 உதவி தேர்வாளர்கள்) என  மொத்தம் 8 நபர்கள் மட்டுமே சமூக இடை வெளியை பின்பற்றி அமரும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள்  திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரி யர்கள் வெவ்வேறு ஒன்றியங்களிலிருந்து மதிப்பீட்டு மையங்களுக்கு வருகை புரிய  ஏதுவாக மண்டல போக்குவரத்து அலுவலருடன் தொடர்பு கொண்டு மே 27  அன்று 6 வழித்தடங்களும், பின்னர் வரும் நாட்களில் 11 வழித்தடங்களிலும் பேருந்து  வசதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் கூடுதல் போக்குவரத்து வசதி  தேவைப்படும் பட்சத்தில் முன்னேற்பா டாக 22 தனியார் பள்ளி பேருந்துகள் தயார்  நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சாரண - சாரணியர் இயக்க தன்னார்வ லர்கள் 21 நபர் அடங்கிய குழு மூலம்  அனைத்து மையங்களின் சுகாதா ரத்தினை கண்காணிக்கவும், செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் 7  நபர்கள் மூலம் குழுக்கள் அமைத்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட வுள்ள ஆசிரியர்கள் பேருந்து மூலம் மதிப்பீட்டு மையம் வந்து செல்வதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது.

அனைத்து விடைத்தாள்  திருத்தும் பணிக்கு வரும் ஆசிரியர்க ளுக்கு அடையாக அட்டை வழங்கப்பட வுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி யில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் / பணியா ளர்கள் உடல் வெப்பநிலையை கண்கா ணித்திட தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆதவா டிரஸ்ட் மூலம் இரண்டா மாண்டு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்க ளுக்கு சுமார் 4,000 முககவசங்கள் மற்றும் சானிடைசர்களும் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 180 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளார்கள் என ஆட்சி யர் தெரிவித்தார்.

;