தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் நெப்போலியன் அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி மடத்தூரில் உள்ள மாநில நுகர்வோர் வாணிப கழக டாஸ்மாக் அலுவலகத்தில் பணியாற்றும் மாவட்ட மேலாளர், பணியாளர்களிடம் மாதாமாதம் ஒருகடையின் விற்பனைக்கு ஏற்ப கமிஷன் வைத்து பல்வேறு குற்றங்களைச் செய்ய தூண்டுகிறார். மேலும் தூத்துக்குடியில் நடைபெறும் அனைத்து டாஸ்மாக் ஊழல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர், சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.