tamilnadu

img

தூத்துக்குடி கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு -  காவல்துறை விசாரணை 

தூத்துக்குடி கடல் பகுதியில் பாகிஸ்தான் படகு ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டுபிடித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி கடல் பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த படகு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படகில் துப்பாக்கிகள் இருந்துள்ளது. இந்த படகு கராச்சி துறைமுகத்தைச் சேர்ந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது கராச்சியில் இருந்து அரபிக்கடல் வழியாக இலங்கை சென்று பிறகு இந்தியாவிற்குள் வந்துள்ளது. இந்த நிலையில், ரோந்து பணியில் இருந்த, இந்திய கடலோர காவல் படை அந்த படகை பிடித்துள்ளனர்.

படகில் சோதனைக்கு உட்படுத்திய போது, 100 கிலோ ஹெராயின் போதை மருந்தும், 10 நாட்டு துப்பாக்கிகளும் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். போதை மருந்தானது பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டதா என விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து இந்திய கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

;