tamilnadu

திரையரங்குகள் திறப்பு  ஒரு வாரத்தில் நல்ல முடிவு அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தூத்துக்குடி:
தமிழக செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தொடர்பான திரைப்படத்தில் நடிப்பது நடிகர் விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மக்களின் உணர்வுகளையும் அவர் மதிக்க வேண்டும். திரைப்படத் துறையைப்பொறுத்தவரை அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. தற்போது திரையரங்கு திறப்பது குறித்துமத்திய அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இது நடைமுறைக்கு எப்படி சாத்தியப்படும் என்பதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் தமிழக அரசுகலந்து ஆலோசித்து, அவர்களின் கருத்துகளைப் பெற்றுஅதன் பின்னர் திரையரங்குகள் திறந்தால்தான் சரியாக இருக்கும்.நான் திங்கட்கிழமை சென்னைக்கு சென்றவுடன் ஓரிருநாட்களில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளை, தமிழக முதல்வரிடம் நேரடியாக அழைத்துச் சென்றுபேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, அதில் அவர்களது கருத்துகளை தெரிவித்து ஒப்புதல் பெறப்படும். பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்துக்குள் நல்ல முடிவு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.