tamilnadu

img

சங்க கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, நவ.17- கட்டுமான தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) புதிய கிளை துவக்க விழா ஞாயிறு அன்று மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு பிரிவில் நடைபெற்றது. விழாவிற்கு செல்வராஜ் தலைமை வகித்தார். கட்டுமான தொழிலாளர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் ராஜாமுகமது சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்து சங்க கொடியை ஏற்றினார்.  விழாவில் சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி பெருநகர் வட்ட செயலாளர் செல்வராசு, முறைசாரா தொழிலாளர் சங்க செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்தி ரன், கட்டுமான சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பூமாலை, ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.