தூத்துக்குடி, ஆக.3- தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டுமான பணி துவக்க நிகழ்ச்சி ஆட்சி யர் சந்தீப் நந்தூரி தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ரூ.2.75 கோடி மதிப்பில் புதிய வட்டாட்சியர் அலுவலக பணிகளை துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பி னர் போ.சின்னப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.