tamilnadu

img

பெரிய சரக்கு கப்பலை கையாண்டு வஉசி துறைமுகம் சாதனை

தூத்துக்குடி:
வ.உ.சிதம்பரனார் துறைமுகம்   16ஆம்தேதி அன்று சரக்கு தளம் ஒன்பதில் 89,777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.பனமா நாட்டு கொடியுடன் எம்.வி. என்பிஏவேர்மீர் என்ற இக்கப்பல் 234.98 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும் மற்றும் 14.16 மீட்டர்மிதவை ஆழமும் கொண்டது. இக்கப்பல் அமெரிக்க நாட்டிலுள்ள பால்டிமோர்  என்றதுறைமுகத்திலிருந்து 89,777 டன் நிலக்கரியை இந்தியா சிமெண்ட் நிறுவனத்திற்கு எடுத்து வந்துள்ளது. இதற்கு முன்பு 25.07.2019அன்று எம்.வி. காமாக்ஸ் எம்பரர்  என்ற கப்பலின் மூலம் 85,224 டன் சுண்ணாம்புக் கல் கையாளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இக்கப்பல் சரக்குதளம் 9-ல் நாள் ஒன்றுக்கு50,000 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் சரக்குகள் கையாளப்படுகிறது. இக்கப்பலின்மொத்த சரக்குகளும் புதன்கிழமை (18.09.2019)  இரவு 10 மணிக்குள் கையாளப்படும். இக்கப்பலின் முகவர்கள் பென் லைன் ஏஜென்சிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்மற்றும் ஸ்டிவிடோர் செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி ஆவர்.வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்புநிதியாண்டு ஆகஸ்ட் 2019 வரை 5.26 மில்லியன் டன் நிலக்கரியை கையாண்டுள்ளது. (கடந்த நிதியாண்டு ஆகஸ்ட் 2018 வரை 5.21 மில்லியன் கையாளப்பட்டது).இந்த சாதனையை படைக்க காரணமாகஇருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பா ளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், பளுதூக்கி இயந்திரம்இயக்குபவர்கள்  மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும்    வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர்  தா.கி. ராமச்சந்திரன்    பாராட்டியதுடன், வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தொடர்ந்து 14 மீட்டர் மிதவை ஆழமுடைய பெரிய கப்பல்களை கையாளுவதினால் தென்தமிழகத்தின் சர்வதேச கடல்வாணிபத்தின் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளது என்று கூறினார். 

;