திருவனந்தபுரம், டிச. 1- மருத்துவத்துறையில் நூற்றாண்டு பாரம் பரியம் உள்ள உலத்தரம் வாய்ந்த ஜப்பான் நிறுவனமான டெருமோ கார்ப்பரேசன், திருவ னந்தபுரம் லைப் சயன்ஸ் பூங்காவில் தொழில் தொடங்க வருமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்தார். சுகா தாரத்துறையின் ஆய்வு மையமான பிரானக்ஸ் சென்டரை பார்வையிட்ட பிறகு அதற்கு இணை யான மையத்தை திருவனந்தபுரத்தில் துவக்கு மாறு முதல்வர் கோரிக்கை விடுத்தார். கட்டடம் கேரள அரசு வழங்குவதாக முதல்வர் கூறினார். சுகாதார பாதுகாப்பு ஊழி யர்களின் பயிற்சிக்கான திறன் மையம் அமைக்க பங்குதாரராக வருமாறு நிறுவனத் தலைவர் ஷின்ஜிரோ சாதோவை கேட்டுக் கொண்டார். டெருமோ கார்ப்பரேசனின் இணை நிறுவ னமான டெருமோ பென்போளின் தலைமை அலுவலகம் திருவனந்தபுரத்தில் உள்ளது. ஜப்பானுக்கு வெளியே ஆசியாவில் மிகப் பெரிய ரத்தவங்கி அமைக்கும் நிறுவனமா கும் இது. இந்த பிரிவை நிறுவ ரூ.105 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இது முழுமையடைவதன் மூலம் உலக ரத்த வங்கி உற்பத்தியில் 10 சதவிகிதம் கேர ளத்தின் பங்காக இருக்கும். திருவனந்தபுரம் டெருமோக் உற்பத்தி நிறுவனத்தின் தரக் கட்டுப்பாடு மைமயமும் தற்போது உள்ளதால் லைப் சயன்ஸ் பூங்காவில் கேரளத்துடன் ஒத்துழைப்பது டெருமோக்குக்கும் பயனளிக்கும் என முதல்வர் தெரிவித்தார். தொழில் நட்பு சூழலை உருவாக்க கேரளா எடுத்துள்ள நடவடிக்கைகளை பினராயி விஜயன் விளக்கினார். நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு அரசு அளிக்கும் ஒத்து ழைப்புக்கு ஷின்ஜிரோ நன்றி தெரிவித்தார். அமைச்சர்கள் இ.பி.ஜெயராஜன், ஏ.கே.சசீந்திரன், தலைமை செயலாளர் டோம் ஜோஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங் கேற்றனர்.