tamilnadu

மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளிகள் பாதிப்பு தமிழக அரசுக்கு கயத்தாறு பாரதிநகர் மக்கள் கோரிக்கை

தூத்துக்குடி, ஆக.9- கேரளா மாநிலம், இடுக்கி மாவட் டம், மூணாறு அருகே நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி கயத்தாறைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத் தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே யுள்ள ராஜமலை பெட்டிமடி பகுதி யில் உள்ள தேயிலை தோட்டத் தில் வேலை பார்த்து வந்தனர். தென்மேற்கு பருவமழை காரண மாக கேரளாவில் பலத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி பெய்த கனமழையில் பெட்டி மடி தேயிலை தோட்டத்தில் திடீ ரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினர் மண்ணில் புதைந்தனர்.  இத்தகவல் அறிந்த கயத்தாறு பாரதி நகர் பகுதி மக்கள் தங்கள் பகுதியைச் சேர்ந்தோர் ராஜமலை பெட்டிமடி பகுதியில் உள்ள தேயி லைத் தோட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், அவர்கள் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம்  என சோகத்தில் மூழ்கினர்.

தொட ர்ந்து வட்டாட்சியர் பாஸ்கரனை தொடர்பு கொண்டு கோரிக்கை  விடுத்தனர். இதையடுத்து வட் டாட்சியர் பாஸ்கர் கயத்தாறு பாரதி நகர் பகுதிக்குச் சென்று அப்பகுதி பொதுமக்களை சந் தித்து ஆறுதல் கூறி்னார். மேலும், தங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வா கம் மூலம் தமிழக அரசின் கவ னத்திற்கு கொண்டு சென்று, கேரள அரசுக்கு அழுத்தம் கொடுத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இந்நிலையில், கயத்தாறு பகு தியைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்த தாக வட்டாட்சியர் பாஸ்கரனுக்கு தகவல் கிடைத்தது. அவர்களின் பெயர் விவரம்: நடராஜன் மகன் முருகன் (48), அவரது மனைவி ராமலட்சுமி (39), பேச்சிமுத்து மகன் மயில்சாமி(45), அவரது மனைவி ராஜேஸ்வரி (43), ஆறு முகம் மகன் பன்னீர்செல்வம் (46), மனைவி தவசியம்மாள் (45), மகள் மௌனிகா(18), சண்முக நாதன் மகன் தினேஷ் (25), பன் னீர்செல்வம் மகள் சிவரஞ்சினி (24), ராமசந்திரன் மகன் ராஜா (35), சுப்பையா மகன் குட்டிராஜ் (47), அவரது மனைவி விஜிலா (45), அச்சுதன் மனைவி பவுன் தாய்(52), மகன் மணிகண்டன் (20), பலவேசம் மகன் சண்முகையா (58), பிரபு மனைவி பழனியம் மாள்(50), மகன் தீபக்(18). தற்போது வரை 17 பேர் உயிரி ழந்துள்ள தகவல் கிடைத்துள் ளது. மேலும், புதைந்த சடலங்கள் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படு கிறது. இதனால் கயத்தாறு பாரதி நகர் பகுதி மக்கள் மிகுந்த சோகத் தில் மூழ்கியுள்ளனர்.