இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு 14ஆவது மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெறுவதையொட்டி தூத்துக்குடியிலிருந்து மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், மாநில நிர்வாகிகள் ஆர்.ரசல், ஆர்.செண்பகம், கே.தங்கமோகன், ஆர்.மோகன் தலைமையில் கொண்டுவரப்பட்ட மாநாட்டுக் கொடி பயணத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் அ.வீராசாமி, சர்க்கரை சம்மேளன செயலாளர் வி.உதயகுமார், பி.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.