தூத்துக்குடி,ஜூலை 2- தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் மாயமானது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரம் பட்டாண்டி விளை கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவது மகள் சிவகாமி புவனேஸ்வரி (20), சாயர்புரத்தில் உள்ள கல்லூரி யில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி சாயர்புரம் செல்வதாக கூறிச் சென்ற அவர் அதன் பின்னர் திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.
இளம்பெண் மாயம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள ஆத்திகுளம், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் சுடலை மணி மகள் சமுத்திரகனி (25), திருமணமாகி கணவரை பிரிந்த இவர், தந்தை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 30ம் தேதி பாளையங்கோட்டைக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பிவரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சுடலைமணி கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.