தூத்துக்குடி, அக்.2- தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் காந்தியடிகளின் 150வது பிறந்தநாளையொட்டி அமைக்கப்பட்ட புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்து பார்வையிட்டார். தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் காந்தியடிகளின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம், தகவல் ஒலிபரப்பு அமைச்ச கம் மற்றும் வ.உ.சிதம்பரனார் கல்லூரி இணைந்து அண்ணல் காந்தியடிகளின் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் புதனன்று நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, காந்தியடிகளின் புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வை யிட்டார். மேலும், காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ. மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.