tamilnadu

கால்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா....

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பல கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம்பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு கவுன்சிலோடு இணைந்து மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சிமுகாம் நடைபெற்றது. இதன் நிறைவு விழா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 

தூத்துக்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் கணேஷ், தமிழ்நாடு கால்பந்தாட்டக் கழக தலைவர் ஜேசையா வில்லவராயர், மாவட்டவிளையாட்டு அதிகாரி பேட்ரிக் பங்கேற்றனர். ஸ்பிரிட்டட் யூத்ஸ் கழகத்தின் தலைவர் பிரின்ஸ்டன்பர்னாந்து தலைமை வகித்தார். ஸ்தாபகர் ஜெயராஜ்ரொட்ரிகோ, மாவட்ட கால்பந்து சங்கச் செயலாளர்ஆல்ட்ரின், கழக பொருளாளர் ஆரோக்கியராஜ், பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாம்ஏற்பாடுகளை ஸ்பிரிட்டட் யூத்ஸ் கழக செயலாளர் மெரின்டோ வி.ராயன் செய்திருந்தார்.