tamilnadu

குடிநீர் என நினைத்து கிருமிநாசினி குடித்தவர் சாவு

 கோவில்பட்டி, மே 30- கோவில்பட்டி அருகே குடிநீர் என நினைத்து, கிருமி நாசினியை குடித்த தொழி லாளி பரிதாபமாக உயிரி ழந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வசந்தநகரைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் மகாராஜன் (42). கட்டிட தொழிலாளியான இவர் கோவில்பட்டியை அடுத்த செண்பகபேரியில் உள்ள கோழிப் பண்ணையில் கட்டிட பணிக்கு அவ்வப் போது சென்று வந்தார். இந்நிலையில் மகாராஜன் வெள்ளியன்று அந்த கோ ழிப்பண்ணைக்கு சென்றார். அங்கு கோழிப் பண்ணையில் தெளிப்பதற்காக கிருமி நாசினியை பாட்டிலில் வைத்து இருந்தனர். அதனை தண்ணீர் என நினைத்து மகாராஜன் குடித்து விட்டார். இதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகா ராஜனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் வழியி லேயே மகாராஜன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின்பேரில், நாலா ட்டின்புத்தூர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.