தூத்துக்குடி:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியில் கடந்த ஆண்டு ஏப்ரல்16-ம் தேதி முடிதிருத்தும் கடை நடத்தும் நபரின் மகளான 12 வயது சிறுமியை பாலியல்பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலைசெய்த கிருபானந்தன் என்பவர், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி செப்டம்பர் 29ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனைக் கண்டித்தும், சிறுமியின் கொலைக்கு நீதி கோரி தமிழகம் முழுவதுமுள்ள சலூன் கடைகள் அக்டோபர் 9ம் தேதிகடையடைப்பு போராட்டம் நடதத முடிவு செய்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலூன் கடைகள் மூடப்பட்டன. தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் மாவட்ட மருத்துவர் மற்றும் முடிதிருத்துவர் சங்கம் (சிஐடியு) சார்பில் பொறுப்பாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு மாநில செயலாளர் ரசல் உரையாற்றினார். முடிதிருத்துவர் சங்க பொதுச் செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் காசி, பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.