tamilnadu

img

சாலைப் பாதுகாப்பு மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 தூத்துக்குடி, ஆக.25- மத்தியஅரசின் சாலை பாதுகாப்பு மசோதாவை கண்டித்து திருச்செந்தூர் பஸ்ஸ்டாண்ட் அருகே தூத்துக்குடி மாவட்ட சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிவதாணு தாஸ் தலைமை தாங்கினார் . சிஐடியு மாவட்டத்தலைவர் ரா.பேச்சிமுத்து துவக்கி வைத்து பேசினார் .சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வய ணப்பெருமாள், சிஐடியு முன்னணி தலைவர் எஸ்.பன்னீர் செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்டான்லி, சங்க ரேஸ்வரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;