தூத்துக்குடி, ஜூலை 28- விவசாயத்தையும், விவசாயி களையும் அழிக்கும் மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கை யை கண்டித்து விவசாயிகள் வீடு களில் கருப்பு கொடி ஏற்றும் ஆர்ப் பாட்டம் விளாத்திகுளம் தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தின் முன்பு நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலா ளர் ராமலிங்கம் தலைமை தாங்கி னார். ஜோதி, பாலமுருகன், மணி, பிச்சைக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதூர் ஒன்றியம் சொக்கமூப்பன்பட்டியில் விவசாயி கள் சங்க கிளை செயலாளர் காளிச் சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதே போல் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.