தூத்துக்குடி, மார்ச் 5- தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகேயுள்ள புத்தன்தருவை கிராமம், பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த வர் முகம்மது மகன் மைதீன் (54), இவ ருக்கு சொந்தமான நிலம் அந்த கிரா மத்தில் உள்ளது. இதன் அருகே அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசிங் மகன் பிரபாகரன் (40) என்பவருக்கு சொந்த மான நிலம் உள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், புதனன்று ஏற்பட்ட தகராறில் பிரபாகரன், மைதீனை அரி வாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மைதீன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகா ரின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வா ளர் அரிகிருஷ்ணன் வழக்குப் பதிந்து பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.