இதுநாள் வரை ரூ.37 ஆயிரம் கோடியில், 37 பைசாவைக் கூட மோடி அரசு ஒதுக்கவில்லை. அதேபோல் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை.
தூத்துக்குடி, பிப்.28- தூத்துக்குடி வ.உ.சி துறை முகத்தில் நடைபெற்ற அரசு விழா வில், பிரதமர் மோடி கலந்து கொண்டு, ரூ. 17 ஆயிரத்து 400 கோடி மதிப்பி லான திட்டங்களைத் துவக்கி வைத்துப் பேசினார். அப்போது, “மக்களின் சேவகனான நான் உங்க ளின் விருப்பங்கள், கோரிக்கை களை நிறைவேற்றுகிறேன்” என்று வாய்ஜாலம் காட்டினார்.
இந்நிலையில், “தூத்துக்குடி யில் லட்சக்கணக்கான மக்களை துயரத்தில் ஆழ்த்திய வெள்ளப் பாதிப்புக்கு, தமிழக அரசு ரூ. 37 ஆயிரம் கோடி கேட்ட நிலையில், 37 பைசாவைக் கூட வழங்காத பிர தமர் மோடி எப்படி மக்கள் சேவ கன் ஆவார்?” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி யுள்ளது.
இதுதொடர்பாக சிபிஎம் தூத் துக்குடி மாவட்டச் செயலாளர் கே.பி. ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டி ருப்பதாவது: கடந்த டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை, வெள் ளத்தால், தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, திரு நெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள் ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள மக்கள், வீடுகள், வாகனங்கள், கால்நடைகள், பொருட்களை இழந்து பெரும் சிர மத்தை சந்தித்துள்ளனர்.
பல்லா யிரம் ஏக்கர் நன்செய் விவசாய விளை நிலங்களில் மணல் மூடி நெற்பயிர்கள், வாழைகள் சேதம டைந்துள்ளன. அதேபோன்று மானாவாரி விவசாயத்தில் உளுந்து, பாசி, மிளகாய், மல்லி, உள்ளி (வெங்காயம்) மற்றும் கம்பு உள் ளிட்ட மானாவாரி பயிர்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. தூத்துக்குடி நகர், திருவை குண்டம், ஏரல் உள்ளிட்ட நகர் பகு திகளில் வைத்திருந்த கடைகளுக் குள் மழை வெள்ளம் புகுந்ததால் வியாபாரிகளுடைய பலசரக்கு, அரிசி, மசாலா பொருட்கள், ஆடை கள் உள்ளிட்ட பொருட்கள் பாதிப்புக்கு உள்ளாகின.
இத்தகைய பாதிப்புக்குள்ளா கிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு தன்னுடைய நிதியில் இருந்து அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி மக்க ளுக்கு ரூ.6 ஆயிரம், குறைவாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு ரூ.ஆயிரம் என வழங்கியுள்ளது. மேலும், விவசாயிகளுக்கும், மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக் கும், கால்நடைகளுக்கும் நிவா ரண நிதி வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கு வதற்காக ஒன்றிய அரசிடம் ரூ. 37 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு கோரியது.
வெள்ள பாதிப்புகளை, ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோரும் நேரில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அதேபோல் மத்தியக் குழுவின ரும் இரண்டு முறை ஆய்வு செய்து சென்றுள்ளனர். எனினும், இதுநாள் வரை ரூ. 37 ஆயிரம் கோடியில், 37 பைசா வைக் கூட மோடி அரசு ஒதுக்க வில்லை. அதேபோல் தமிழக மீன வர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களின் கோரிக்கையையும் நிறைவேற்ற வில்லை.
ஆனால், தற்போது தேர் தல் காலம் என்பதால், “நான் மக் கள் சேவகனாக மக்களின் விருப் பங்களையும், கோரிக்கைகளை யும் நிறைவேற்றுவேன்” என்று மேடை யில் பேசி மக்களை ஏமாற்றும் நட வடிக்கையில் பிரதமர் மோடி இறங் கியுள்ளார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கண்ட னத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே.பி. ஆறுமுகம் கூறியுள்ளார்.