tamilnadu

img

மத்திய- மாநில அரசுகளைக் கண்டித்து தூத்துக்குடி, எட்டையபுரம், விளாத்திகுளத்தில் சிபிஎம் பிரச்சாரம்

தூத்துக்குடி, ஆக.26- மத்திய- மாநில அரசுகளை மக்கள், தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தூத்துக்குடி மாநகர் 47-வார்டு கிளை சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்- ஆர்ப் பாட்டம் புதன் அன்று லெவிஞ் புரத்தில் நடைபெற்றது. பிரச்சாரத் திற்கு ஆறுமுகம், மாநகரக்குழு உறுப்பினர் தலைமை வகித்தனர். மாநகர் செயலாளர் ராஜா, முத்து, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடமலாபுரம் கிராமத்தில் கிளைச் செயலாளர் கருப்பசாமி தலைமையில் நடை பெற்றது. தாலுகா செயலாளர் கு.ரவீந்தின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலையூரில் செய லாளர் வைரமாலா தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் விஐி பேசினார். எட்டையபுரம் 3-வது பகுதி கிளை சார்பில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு பகுதிச் செயலாளர் முரு கேசன் தலைமை தாங்கினார். மாணிக்கவாசகம் முன்னிலை வகித்தார். தாலுகா குழு உறுப்பி னர் நடராஜன், தாலுகா செயலா ளர் ரவீந்திரன், நகரகுழு உறுப்பி னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலவாசல் பகுதி முழுவதும் துண்டு பிரசுரம் விநி யோகிக்கப்பட்டது. விளாத்திகுளம் தாலுகா வீர பாண்டியபுரம் கிராமத்தில் கிளைச் செயலாளர் கோவிந்த சாமி தலைமையிலும், சூரங்குடி யில் கிளைச் செயலாளர் மலைக் கனி தலைமையிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கட்சி தாலுகாச் செயலாளர் புவிராஜ், தாலுகா குழு உறுப்பினர் ராமலிங்கம், உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

;