tamilnadu

கொரோனா பாதிப்பு: தூத்துக்குடியில்  பெண் உட்பட 2 பேர் பலி

தூத்துக்குடி, ஜூலை 11- தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த 50 வயது பெண், உடல் நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சனியன்று உயிரிழந்தார். இதே போல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டணத்தைச் சேர்ந்த 58 வயது முதியவரும் உயிரிழந்தார். இதுவரை தூத்துக்குடி மாவட்டத் தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. அது போல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. 

;