tamilnadu

img

நூறுநாள் வேலையை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த மாதர் சங்கம் கோரிக்கை

தூத்துக்குடி:
நூறுநாள் வேலைதிட்டத்தை நகர்ப்புற பகுதிகளுக்கு விரிவுபடுத்தக் கோரியும், 200 நாளாக உயர்த்திட வலியுறுத்தியும் ஒட்டபிடாரம் யூனியன் அலுவலகம் முன்பு மற்றும் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி, ஒட்டப்பிடாரம் மற்றும்  வீரபாண்டியபட்டணம் ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் பூமயில், மாவட்ட பொருளாளர் ராமலெட்சுமி, வள்ளியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.உடன்குடியில் மாதர் சங்கம், விதொச இணைந்து பிடிஓ அலுவலகம் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் பூமயில், ஒன்றிய தலைவர் செல்வி, ஒன்றிய செயலாளர் உலகமணி, இசக்கியம்மாள், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், விதொச கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

;