தூத்துக்குடி, ஆக.6- கோவில்பட்டியில் இளைஞர் கொலை வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் மூவரை கைது செய்த தனிப்படை போலீ சாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாஸ்திரி நகரில் புதனன்று (ஆக.05) மாலை பாரதி நகர் மேட்டுத்தெரு, கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் கோடீஸ்வரன் (29) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோடீஸ்வரன் தந்தை மாடசாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, இறந்த கோடீஸ்வரன் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசா ரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்கா ணிப்பாளர் கலைக்கதிரவன் மேற்பார்வை யில் கோவில்பட்டி மேற்கு காவல் ஆய்வா ளர் அய்யப்பன் தலைமையில், உதவி ஆய் வாளர் அரிக்கண்ணன், ஸ்டீபன், சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி, தலைமை காவலர்கள் முருகன், மற்றொரு முருகன், ஆனந்த அமல்ராஜ், ரமேஷ், ஸ்டீபன் இளை யராஜா, காவலர்கள் முகமது மைதீன், மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய தனிப்ப டைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கொலை தொடர்பாக கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமகிருஷ்ணன் (27), சாஸ்திரி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக் காளை (24) மற்றும் காசிப்பாண்டி மகன் பாலுக்குட்டி (26) ஆகியோரை தனிப்படை யினர் கைது செய்தனர். விசாரணையில், முன் விரோதத்தில் அவர்கள் கோடீஸ்வ ரனை, கொலை செய்தது தெரியவந்துள் ளது. குற்றவாளிகளை விரைந்து 12 மணி நேரத்தில் கைது செய்த காவல்துறை தனிப் படையினரை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.