tamilnadu

img

கொரோனா வைரஸ் பாதிப்பு... ஆந்திராவில் முதல் பலி

விஜயவாடா 
கொரோனா வைரஸ் பரவலில் 2-வது நிலையில் உள்ள இந்தியா 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மதிய நேர நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500-யை தொட்டது. இன்று மட்டும் புதிதாக 24 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், தென்னிந்திய மாநிலமான ஆந்திரா கொரோனா வைரஸுக்கு முதல் பலியைச் சந்தித்துள்ளது. கொரோனா பலி தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"ஆந்திராவில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 55 வயதுடைய நபர் கடந்த 30-ம் தேதி இறந்தார். அவரது இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், பரிசோதனை முடிவில் இறந்த நபர் கொரோனா வைரசால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளது.
 

;