tamilnadu

img

கேரளாவில் கொரோனா கண்காணிப்பில் உள்ளோர் எண்ணிக்கை குறைந்தது... 

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா கண்காணிப்பில் இருந்தோர் 17, 743 பேர். வெள்ளியன்று இந்த எண்ணிக்கை 4 ,934  என நான்கில் ஒரு பகுதியாக குறைந்தது.  

வெள்ளியன்று 775 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை நிறைவு செய்தனர். 11 நபர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதிதாக 73 பேர் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டனர்.  இதில் 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெள்ளியன்று கிடைத்த 136 பரிசோதனை முடிவுகள் நோய் இல்லை என வந்துள்ளன. 88 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 143 முடிவுகள் நிலுவையில் உள்ளன.
 

;