tamilnadu

ஆதார் மையத்தில் “சர்வர்” பிரச்சனை... மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்...

திருவில்லிபுத்தூர்:
திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் காத்திருப்பு கூடம் கட்டப்பட்டுள்ளது, இங்கு ஆதார் அட்டையில் பெயர் சேர்த்தல் ,பெயர் நீக்குதல் செல்போன்நம்பர் மாற்றம்  மற்றும் திருத்தம் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறதுதிருவில்லிபுத்தூர் மட்டுமன்றி சுற்றுப்புறங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் இங்கு வந்து தங்களதுஆதார் அட்டையில் தேவையான திருத்தங்களை செய்வதற்காக வருகின்றனர்.  இந்த அலுவலகத்தில் தினமும் 30 பேருக்கு மட்டுமே ஆதார் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சர்வர் பிரச்சனையால் ஆதார் அட்டையில் திருத்தல் மற்றும் சேர்த்தல் உட்பட பல்வேறு பணிகள் மிகவும் தொய்வாக நடைபெறுகிறது. இதனால் ஆதார்அட்டைக்காக பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலைஏற்படுகிறது.