திருவாரூர் மாவட்டம் குடவாசல் பள்ளிவாசல் வீதியில் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு - குடவாசல் ஜமாத்தாரர் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் விளக்க பொதுக் கூட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அஸ்ரப் அலி தலைமை வகித்தார். குடவாசல் ஜமாத்தாரர் தலைவர் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உரையாற்றினார். திமுக நகர செயலாளர் ஆர்.முருகேசன், ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் பலர் பேசினர். கூட்டத்தில் தோழமைக் கட்சியினர், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக ஆண்கள் -பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.