பவித்திரமாணிக்கத்தில் முழு கடையடைப்பு
திருவாரூர், ஆக.19- திருவாரூர் வட்டம் இளவங்கார்குடி ஊராட்சி, பவித்திரமா ணிக்கத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களுக்கு முழு கடையடைப்பிற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனையொட்டி புதன்கிழமை காலை 6 மணி முதல் இப்பகுதி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. இந்த ஊராட்சியில் நோய்த்தொற்றாளர்கள் அதிகரித்து வருவ தால் மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத்துறையும் இணைந்து இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. திருவாரூர் நகராட்சியை ஒட்டியுள்ள இவ்வூர் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கக்கூடி யது. கடையடைப்பு காரணமாக ஆளரவமின்றி காணப்பட்டது.
வாலிபர்-மாணவர் ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம்,. ஆக.19- மத்திய அரசு, ஓ.பி.சி. இடஒதுக்கீடு 50 சதவீதமாகச் சட்டம் இயற்றிச் செயற்படுத்திட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்று வரு கிறது. நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், இராரதி மங்கலம், ஆண்டிப்பந்தல் ஆகிய கிளைகளின் சார்பில், ஆண்டிப்பந்தலில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலை வர் ஏ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. தரங்கம்பாடி மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கங்களின் சார்பில் வாலிபர் சங்க வட்டத்தலை வர் வீ.எம்.சரவணன் தலைமை வகித்தார்.
சிஐடியு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
அறந்தாங்கி, ஆக.19- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அறந்தாங்கி ஒன்றிய ஒருங்கி ணைப்புக் குழு கூட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் டைமன்ட் நர்சரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கே. தங்கராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா துவக்க உரையாற்றினார். 22 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கி ணைப்பு குழு தலைவராக தங்கராஜ் தேர்வு செய்யபட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாவட்ட மூத்த தலைவர் எம்.ஜியா வுதீன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.ஸ்ரீதர் நிறைவுரையாற்றினார்.
மாற்றுத் திறனாளிகள் சங்க கிளை அமைப்பு
தஞ்சாவூர், ஆக.19- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம், தென்னம நாடு ஊராட்சியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க த்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் டி.கஸ்தூரி தலைமை யில் நடைபெற்றது. புதிய கிளையின் தலைவராக டி.கஸ்தூரி, துணைத் தலைவராக திராவிடச்செல்வி, செயலாளராக வேத வள்ளி, துணைச் செயலாளராக பிரபாகரன், பொருளாளராக ஆர்.ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வா கிகளை அறிமுகப்படுத்தி மாவட்டச் செயலாளர் பி.எம்.இள ங்கோவன் பேசினார்.
சிறப்பு ரத்த தான முகாம்
அறந்தாங்கி, ஆக.19- இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் தமிழகத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் சுதந்திர தின சிறப்பு ரத்த தான முகாம்கள் நடைபெறுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம்வெட்டிவயல் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்து வமனை இணைந்து ரத் தான முகாமை நடத்தின.மாவட்ட செய லாளர் முகம்மது மீரான் தலைமை வகித்தார். முகாமில் 21 பேர் ரத்தம் கொடையளித்தனர். இவை அறந்தாங்கி அரசு மரு த்துவமனைக்கு வழங்கப்பட்டன.
பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி,ஆக.19- பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அனைத்து பாலை யும் அனைத்து நாட்களிலும் கொள்முதல் செய்ய வேண்டும். 50 சதவீதம் மானியத்தில் மாட்டு தீவனம் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் பாலையும் சேர்க்க வேண்டும். பால் உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க தொட்டியம் வட்டக்குழு சார்பில் தொட்டியம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் ராமநாதன், விதொச வட்ட செயாளர் முருகன், ஓஎச்டி மாவட்ட தலைவர் பழனி வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாதர் சங்கம் கோரிக்கை மனு
தஞ்சாவூர், ஆக.19- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், தஞ்சை மாவட்டத்தில், 33-க்கும் மேற்பட்ட ரேசன் கடை களில் சென்று ஆய்வு செய்து, 127 பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலத்தில், ரேசன் கடை களில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ரேசன் பொ ருட்கள் அனைத்தையும் டிசம்பர் மாதம் வரை விலையில்லா மல் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, திங்க ட்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) ஆகியோ ரிடம் மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி கோரி க்கை மனுவை அளித்தார். அப்போது, மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் இ.வசந்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வனரோஜா, கோ.பைந்தமிழ் ஆகியோர் உடனிருந்தனர்.
கொரோனா கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரிக்கை
தஞ்சாவூர், ஆக.19- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் தலையா மங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று த்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் புதிய கிளை அமைப்புக்கூட்டம் தர்மராஜ் தலை மையில் நடைபெற்றது. இதில் கிளைத் தலைவராக அய்யப்பன், துணைத் தலை வராக சேகர், செயலாளராக மருதையன், துணைச் செயலா ளர்களாக ராமசாமி, பாலகுரு, பொருளாளராக ராஜா ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசி னார். கூட்டத்தில், “கொரோனா காலத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.5000 நிவாரணமாக தமிழக அரசு வழங்கிட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.