tamilnadu

திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் முக்கிய செய்திகள்

திருவாரூரில் கேரம் போட்டிகள்
திருவாரூர், ஆக.10- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவாரூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவால் அக்.18 மற்றும் 19-ம் தேதிகளில் திருவாரூர் பவித்திரமாணிக்கம் கேம்பைன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் மாவட்ட அள விலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இளநிலைப் பிரிவில் மழலை வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலுபவர்களும், முதுநிலைப் பிரிவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். அக்.18-ம் தேதி மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு, இளநிலை பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளும், முதுநிலைப் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் 19-ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும். மாணவர்கள் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலைப்பிரிவு களில் ஒரு பள்ளியிலிருந்து இரண்டு ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் அணிகளும், மாணவியர் பிரிவில் இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் ஒரு பள்ளியிலி ருந்து இரண்டு ஒற்றையர் மற்றும் இரண்டு இரட்டையர் அணிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஒரு போட்டியாளர் ஒற்றையர் பிரிவில் அல்லது இரட்டையர் பிரிவில் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.  போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பத்தினை sdat.tn.gov.in என்ற இணைய தளத்தில் SDíî Gblibe Application மூலமாக விண்ணப்பம் செய்ய வேண்டும். வெற்றி பெறுபவர்கள், மாநிலப் போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். மாவட்டப் போட்டி களில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி அளிக்கப்பட மாட்டாது. மேலும் விபரம் பெற்றிட திருவாரூர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்.04366 227158-ல் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் த.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தஞ்சை அரசு மருத்துவமனையில்  குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவு  மருத்துவக் கல்லூரி முதல்வர் விளக்கம் 
தஞ்சாவூர், அக்.10- தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது என தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்க ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.  தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஓராண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்து விட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், புதன்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்த தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் கூறிய தாவது, “தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யுடன் இணைந்து இயங்கும் அரசு ராசா மிராசுதார் மருத்துவ மனையில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 995 என தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் கூறப்பட்டு வருகிறது. இது, பெரிய எண்ணிக்கையாகக் கருதப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் 2018, ஜனவரி மாதம் முதல் 2019, ஜூன் மாதம் வரை 1.72 லட்சம் குழந்தைகள் சிகிச்சைக் காகச் சேர்க்கப்பட்டனர். தவிர, உள் நோயாளிகளாக 16,000 க்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டனர். இதில், 995 குழந்தைகள் இறப்பு என்பது, அனைவருமே ராசா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்த வர்கள் கிடையாது. தாய்மார்கள் பிரசவத்துக்கு வரும்போது, கருவிலேயே குழந்தைகள் இறக்கின்றனர். அறுவை சிகிச்சை அல்லது சுக பிரசவம் மூலம் குழந்தைகள் இறந்த விவ ரம் தெரிய வருகிறது. இதுபோன்று 332 குழந்தைகள் இறந் துள்ளனர். மேலும், இதய நோய், மூளை பாதிப்பு உள்ளிட்ட குறைபாடு டைய குழந்தைகள் பிறந்தவுடனேயே இறந்துவிடுதல் என 200 குழந்தைகள் இறந்தனர். தவிர, வெளியில் உள்ள மருத்துவமனையிலிருந்து, வெளியூர்களிலிருந்து மேல் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டு இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120. இந்த எண்ணிக்கையைத் தவிர்த்து, இந்த மருத்துவமனையில் உண்மையிலேயே பிழைக்க வைக்க முடியாத குழந்தைகளின் எண்ணிக்கை 335 மட்டுமே. எனவே, ஒன்றரை ஆண்டில் 335 குழந்தைகள் இறப்பு என்பதே உண்மை. இது, சதவீத அடிப்படையில் பார்த்தால் 2.1 சதவீதம் மட்டுமே உள்ளது. இது மிகவும் குறைவான எண்ணிக்கை. மாநில அளவிலான குழந்தைகள் இறப்பு விகிதம் 18 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம்தான் ராசா மிராசுதார் மருத்துவமனையிலும் உள்ளது. இதையும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார் குமுதா லிங்கராஜ்.

இலவச கழிப்பறை கட்டித் தரக் கோரிக்கை 
அரியலூர், அக்.10- ஜெயங்கொண்டம் நகராட்சியில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து கள் வந்து செல்கின்றன. அணைக்கரையில் பாலம் பழுத டைந்த காரணத்தால் சென்னையில் இருந்து தஞ்சை செல்லும் பேருந்து இந்த வழியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை கட்டப்பட வில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகத்திடமும், நகராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து ஆட்சியர், உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண் டும் என ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடா சலம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.