tamilnadu

தலையாமங்கலம் வீட்டு வசதி ஊழல் 4 கள அலுவலர்கள், பணியாளர்கள் இடைநீக்கம்

மன்னார்குடி, ஆக.3- மன்னார்குடி  ன்றியம் தலையா மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சோழ பாண்டி, ராஜகோபாலபுரம் கிராமங்க ளில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கோ டிக்கணக்கான ரூபாய் அளவிற்கு அதிர்ச்சியளிக்கும் மோசடி ஊழல் நடை பெற்றுள்ளது.  இத்திட்ட பயனாளிகளுக்கு திட்ட த்திற்கான நிதி தலா ரூ.1.7 லட்சம் போய் சேரவில்லை. மாறாக போலி யாக உருவாக்கப்பட்ட வங்கி கணக்கு களில் இத்திட்ட நிதி செலுத்தப்பட்டு பின்னர் இத்தொகை கள்ளத்தனமாக பல  தவணைகளில் எடுக்கப்பட்டுள்ளது என  தீக்கதிர் உள்பட ஊடகங்கள், பத்திரி கைகள் செய்திகள் வெளியிட்டிருந்தன.  இந்த மோசடிகளை வெளிக்கொ ணர்ந்த  முன்னாள் தலையாமங்கலம் ஊராட்சியின் தலைவரும்  மதிமுக ஒன்றிய செயலாளருமான மாசிலாமணி மற்றும் அவரது உறவினர் எஸ்.பிரபா கர் மீதும் நான்கு பிரிவுகளில் தலையா மங்கலம் காவல் நிலையத்தில் பொய்  வழக்கு புனையப்பட்டுள்ளது  என்பதை  தீக்கதிர் நாளேடு செய்தி வெளியிட்டி ருந்தது.  

இதன் தொடர்ச்சியில் இந்த மெகா  ஊழலை விசாரித்து அறிக்கை சம ர்ப்பிக்க திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலு வலர் பொன்னியின் செல்வன் தலை மையிலான குழுவினை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் பணித்திருந்தது. இந்த குழு தலையாமங்கலம் கிரா மத்திற்கு சென்று மக்களிடம் விசாரணை  நடத்தி வருகிறது. இதில் மோசடி ஊழல் நடைபெற்றி ருப்பது முதல் நோக்கிலே உறுதி செய்யப்பட்டிருப்பதால்  மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலா ளர் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலு வலர் கஸ்தூரி, உதவி பொறியாளர்  சண்முகசுந்தரம், பணி மேற்பார்வையா ளர் பிரபாகரன் ஆகிய நான்கு  கள பணி யாளர்கள் திருவாரூர் மாவட்ட நிர்வாக த்தால் பணியிடை நீக்கம் செய்யப்ப ட்டுள்ளனர்.   உதவி திட்ட அலுவலர் பொன்னி யின் செல்வன் கள விசாரணை இன்னும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கலாம் என வும் இதன் முடிவில் இன்னும் பலரின் ஊழல் தொடர்பு வெளிச்சத்திற்கு வரும்  எனவும் ஊரக வளர்ச்சித்துறை வட்டார  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளர் எம்.திருஞானம் மற்றும் தலையாமங்கலத்தில் வசித்து வரும் சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் செய்தியாளரிடம் கூறுகையில், ‘மிகப்பெரிய இந்த ஊழல்  மோசடி அம்பலமாகி பத்து நாட்களில்  நான்கு கள அலுவலர்கள் மற்றும் ஊழி யர்கள்  மட்டும் பணியிடை நீக்கம் செய்ய ப்பட்டுள்ளனர். இத்திட்ட நிதியை, வீடு களை கள ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள மேல்  அதிகாரிகள் இன்னும் முதல் கட்ட நடவடிக்கை களுக்குள் கொண்டு வரப்படவில்லை. இது பல சந்தேகங்களை ஏற்படுத்தி யுள்ளது. இந்த மோசடியின் தொடர்ச்சியில் தலையாமங்கலம் கிராமத்திலுள்ள நபர்கள் இந்த மோசடியில் சில  இடைத்தரகர்களாகவும் ஊழல் பங்கா ளிகளாகவும் இருந்துள்ளனர். இவர்க ளும் இந்த விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். உதவி திட்ட அலுவலரின் விசாரணை முடிவில் இவர்கள் அனைவரின் மீதும் மோசடி, ஊழல், போலி ஆவ ணங்கள் தயாரித்து ஏமாற்றுதல் உள்ளிட்ட ‘இந்திய தண்டனைச் சட்ட குற்றப் பிரிவுகளின் கீழ்’கு்ற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். இதைத்தான் நாங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் எதிர்பார்க்கிறோம். இது ஒன்றே, இந்த விசாரணைகள் அதன் நடவடிக்கைகள் சரியான திசையில் சென்று கொண்டி ருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் என்றனர்.        

         (ந.நி)