குடவாசல், ஜூன் 20- திருவாரூர் மாவட்டம் குடவா சல் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த கால்வாய் சரியான முறை யில் அமைக்கப்படாததால், மழைக் காலத்தில் மழைநீர் வடி வதற்கு உகந்ததாக இல்லை. இந்நிலையில் தற்போது மழை நீர் கால்வாயில் கழிவுநீர் கலக்கி றது. இதில் கழிவுநீர் சீராக செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்ப தால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பாக பலமுறை கூறி யும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உட னடியாக பேரூராட்சி நிர்வாகம் மழைநீர் கால்வாயில் உள்ள கழிவு நீரை அகற்றி மக்களை தொற்று நோயிலிருந்து காக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.