மன்னார்குடி, மார்ச் 11- இந்தியன் வங்கியின் கும்பகோணம் மண்டலம் சார்பில் வாடிக்கையாளர்க ளுக்கு கடன் வழங்கும் முகாம் கும்பகோணத்தில் நடைபெற்றது. வங்கியின் செயல் இயக்குனர் பட்டா ச்சாரியா தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் சென்னை கள பொதுமே லாளர் சந்திராரெட்டி ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் வாடி க்கையாளர்களுக்கு கடன் வழங்கினார். முன்னதாக கும்பகோ ணம் சாந்தி நகரில் இட மாற்றம் செய்யப்பட்ட மண்டல அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை செயல் இயக்குநர் மற்றும் கள பொதுமேலாளர் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சி யில் மண்டல அலுவலக முதன்மை மேலாளர்கள் ராஜா, சகாதேவன், கிளை மேலாளர்கள் ராதாகிரு ஷ்ணன், பன்னீர்செவ்ம், குல்திப் சிங், சுமன்லதா, தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் கிளை உதவி பொது மேலாளர் ஜெயலெட்சுமி, முதுநிலை மேலாளர் ஜான்சன், செம்மல், கவுத மன், சுப்பிரமணியன் ஹீரா, மார்க்கெட்டிங் மேலாளர் பிரசாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக கும்பகோணம் மண்டல மேலாளர் விஜயகுமார் வர வேற்றார். துணை மண்டல மேலாளர் மோகன் நன்றி கூறினார்.