tamilnadu

தமிழக முதல்வருக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பெருந்திரள் முறையீடு

திருவாரூர்:
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெருந்திரள்முறையீடு செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக மனுக்கள்அனுப்பப்பட்டன. 
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்திடம் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் வெ.சோமசுந்தரம் தலைமையில், மாவட்ட தலைவர் எஸ்.மகேஷ், மாவட்ட செயலாளர் டி.எஸ்.அசோக், மாவட்டதுணை தலைவர் எஸ்.ரவி, மாநில செயற்குழு உறுப்பினர் டி.சுகுமார் ஆகியோர் மனுவை அளித்தனர்.கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டு தொற்றில் பாதிக்கப்பட்ட வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களுக்கு அரசாணையின் பணி கருணைத்தொகை ரூ.2 லட்சம் வழங்கவேண்டும். பதவி உயர்வு பட்டியலை உடனடியாக வழங்கிட வேண்டும்.கொரோனா நோய்த்தடுப்பு பணியின் போது விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களின் பணி நியமன ஆணைகளை உடனடியாக வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. துறை அமைச்சர், அரசு தலைமைச் செயலாளர், கூடுதல் தலைமைச்செயலாளர்கள் உள்ளிட்டோருக்கும் மனுவின் நகல்கள் அனுப்பட் டுள்ளன.