tamilnadu

img

நன்னிலம் ஒன்றியத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்

குடவாசல், அக்.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நன்னிலம் ஒன்றியத்தில் மக்க ளிடம் நேரடியாக சென்று அவர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு காணும் மக்கள் சந்திப்பு இயக்கம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை 2 நாட்கள் நடைபெற்றது. நன்னிலம் ஒன்றியம் தலையூர் ஊரா ட்சியில் சனிக்கிழமை காலை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை யில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மக் களை நேரடியாக சந்தித்து அந்த பகுதி மக்களிடம் வாழ்வாதார பிரச்சனைகள் கேட்டறிந்து, அடிப்படை தேவைகளை பொதுமக்களிடம் கோரிக்கை மனுவாக பெற்றனர்.  கபனங்காட்டாங்குடி வாய்க்காலை சீரமைக்க வேண்டும். நேரடி கொள் முதல் நிலையம், பொதுக்கழிப்பிடம், நூறு நாள் வேலை முறைகேடுகள், கிராமப்புற சாலைகள் புனரமைப்பு உள்ளிட்ட பொதுப் பிரச்சனைகள் மனு வாக வந்தது. இவை தவிர வீட்டுமனைப் பட்டா, முதியோர்/ விதவை உதவித் தொகை, புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வந்தன. இதே போல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமியச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இயக் கத்திற்கு நன்னிலம் ஒன்றிய செய லாளர் டி.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மக்கள் சந்திப்பு இயக்கத் தில் இரண்டு நாட்களும் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு மக்களிடம் குறை களை நேரடியாக கேட்டறிந்தார். மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தியாகு.ரஜினிகாந்த், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் கே.எம்.லிங்கம், பி.ஸ்டாலின், டி.பி.ராஜா சீனி.ராஜேந்திரன், எம்.ராம மூர்த்தி, வரத.வசந்தராஜன் மற்றும் வாலிபர் சங்க தலைவர் வசந்தபாலன், செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்டோர் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டனர். 
வலங்கைமான் 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் சார ணத்தம், பூணாயிருப்பு, மாணிக்க மங்கலம், அரையூர், கண்டியூர், மத கரம் ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு இயக்கம் 12,13-ம் ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பூணாயிருப்பு ஊராட்சி மாணாநல்லூர் கிராமத்தில் நடை பெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்திற்கு கிளை செயலாளர் ஆர்.ஜெயந்தி தலைமை வகித்தார். வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.இராதா முன் னிலை வகித்தார். மக்கள் சந்திப்பு இயக்கத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன் நகர செயலாளர் எஸ்.சாமிநாதன், கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மக்க ளுடைய குறைகளை கேட்டறிந்தனர். மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்ற இடங்களில் மக்கள் எழுச்சி யுடன் கலந்து கொண்டு தங்களின் அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.