குடவாசல், மே 8- தமிழக அரசு டாஸ்மாக் கடை திறப்பு நடவடிக்கையை கண்டித்து நன்னிலம் ஒன்றியம் கூத்தனுரில் கருப்பு கொடி ஏற்றி நடைபெற்ற போராட்டத்திற்கு சி.பி.எம் நன்னிலம் ஒன்றிய செயலாளர் டி.வீரபாண்டியன் தலைமை வகித்தார். கொல்லுமாங்குடியில் கட்சியின் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகம்மது உதுமான், அகரகொத்தங்குடியில் கே.எம்.லிங்கம், பாவட்டகுடியில் எம்.ராமமூர்த்தி, வேலங் குடியில் வசந்தராஜன், பேரளத்தில் சீனி. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.