tamilnadu

மே 1 திருநள்ளாறில் தேரோட்டம்

மன்னார்குடி, ஏப்.25-காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் ஆண்டு தோறும் மே மாதம் நடைபெறுகிறது. 2019 மே 1-ம் தேதி நடைபெறவுள்ள தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து காரைக்கால் மாவட்ட கூடுதல் ஆட்சியரும், ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில் நிர்வாக அதிகாரியுமான விக்ரந்த் ராஜா கூறுகையில், 2019 மே மாதம் 1-ம் தேதி நடைபெறும் தேரோட்டத்தினை சிறப்பான வகையில் நடத்திடவும், தரிசனத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு தேவையான சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் மாவட்ட நிர்வாகமும், கோவில்நிர்வாகமும் இணைந்து செய்து வருகிறது என்றார்.

;