மன்னார்குடி புத்தக திருவிழாவின் 7-ஆம் நாள் பொது அரங்கம் சுழல் சங்க வி.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. சுழல் சங்க ஆர்.வெங்கடேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஜெ.வெங்கடேஷ் வரவேற்றார். மாணவர்களின் பாடல் ஆடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாவலர் கலைபாரதி புத்தகம் என்ன செய்யும் என்ற தலைப்பில் உரையாற்றினார். அறிவை விரிவு செய் என்ற தலைப்பில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். நிறைவாக அறிவியல் இயக்கத்தின் கே.வி.பாஸ்கர் நன்றி கூறினார்.